பிள்ளைகளை கிறிஸ்துவுக்குள் நன்றாக வளர்க்க வேண்டும் என்று
பிரயாசப்படுகிற பெற்றோர்கள் மாத்திரம் இந்த சத்தியங்களை படியுங்கள்
பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து வேத வாக்கியங்களை
கொண்டு கற்றுக் கொள்ளப்போகிறோம்
பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குறித்து தேவன் என்ன சொல்லி
இருக்கிறாரோ அப்படியே அவர்களை வளர்க்கும் போது நிச்சயமாக அவர்களுடைய
மரணபரியந்தம் தேவனை பின்பற்றுவார்கள்
1) பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என்பதையும் கர்ப்பத்தின் கனி
கர்த்தரால் கிடைக்கும் பலன் என்பதையும் பெற்றோர்கள் முதலில் உணர்ந்து
கொள்ள வேண்டும்
Psa 127:3 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி
அவரால் கிடைக்கும் பலன்.
2) சிம்சோனின் தகப்பனாகிய மனோவா பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று
தேவனிடத்தில் கேட்டார்
Jdg 13:12 அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப்
பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று
கேட்டான்.
நாமும் பிள்ளைகளை வளர்க்கக்கூடிய விசயத்தில் மனோவாவை போல தேவனிடத்தில்
ஜெபிக்க வேண்டும்
A) உங்கள் பிள்ளைகள் இப்படி இருக்க விரும்புவீர்களா?
1) திருடனாகவும் பண ஆசையுள்ளவனுமாயும் இருக்க வேண்டும்
2) கொலைகாரனாக
இருக்க வேண்டும்
3) பொய்
சொல்லக்கூடியவனாக
இருக்க வேண்டும்
4) மதுபானத்திற்கும் போதைப் பழக்கத்திற்கு
அடிமையானவனாக
இருக்க வேண்டும்
5) வேசித்தனம் அல்லது விபச்சாரம் செய்கிறவனாக இருக்க வேண்டும்
6) களியாட்டுகளில் (உல்லாசமாய்) ஈடுபாடு உடையவனாக
இருக்க வேண்டும்
7) புகை (சிகரெட்) பிடிக்கிறவனாக
இருக்க வேண்டும்
8) பெற்றோருக்கு கீழ்ப்படியாதவனாக
இருக்க வேண்டும்
9) கோபக்காரனாகவும் மூர்க்கவெறி
கொண்டவனாகவும்
இருக்க வேண்டும்
10) தேவன் இல்லையென்று சொல்லக்கூடியவனாக
இருக்க வேண்டும்
இப்படி அநேக காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம்
மேலே சொன்னபிரகாரம் உங்கள் பிள்ளைகளை நீங்கள் நிச்சயமாக வளர்க்க ஆசைபட மாட்டீர்கள்
ஆனால் உலகம் அவர்களை இப்படிப்பட்டவர்களாக தான் இருக்க வேண்டும் என்று
விரும்புகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
B) உங்கள் பிள்ளைகளை இப்படி வளர்க்க ஆசைபடுகிறீர்களா?
1) தேவனை எப்போதும் தேட கூடியவர்களாக
இருக்க வேண்டும்
2) பரிசுத்தமாய் வாழக் கூடியவர்களாக
இருக்க வேண்டும்
3) சபைக்கு தூணும் ஆதாரமுமாய்
இருக்க வேண்டும்
4) தேவனுடைய வார்த்தைகளை மாத்திரம் பிரசங்கிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
5) அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
6) பெற்றோருக்கு சகல காரியத்திலும் கீழ்ப்படியக் கூடியவர்களாக
இருக்க வேண்டும்
7) கிறிஸ்துவைப் போல பாடுபடக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
8) கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய்
வளரக்கூடியவர்களாக
இருக்க வேண்டும்
9) மரணபரியந்தமும் கிறிஸ்துவுக்குள் இருக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
10) குடும்பத்தோடு தேவனை சேவிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்
இன்னும் அநேக காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம்
உங்கள் பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்க்க வேண்டும் என்றால் தேவன்
தம்முடைய வேத வாக்கியங்களை கட்டளையிட்டது போல பிள்ளைகளை வளர்ப்பீர்கள்
என்றால் அவர்கள் தேவனுக்குள்ளும் கிறிஸ்துவுக்குள்ளும் நிலைத்து
இருப்பார்கள்
3) பிள்ளைகளை வளர்க்கக்கூடிய விசயத்தில் இரண்டு வழிகள் நமக்கு முன்பதாக இருக்கிறது
1) தேவனுடைய கட்டளையின் (வார்த்தை) படி வளர்ப்பது
2) உலகத்தாரைப் போல சுயமாய் வளர்ப்பது
Jer 21:8 ,,,,, இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே
ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று வேத வாக்கியங்களை கொண்டு
தெளிவாக கற்றுக் கொள்ளுவோம்
Psa 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக்
காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.