வெளிப்படுத்தின விசேஷம் 12ம் அதிகாரத்தில் வரும் ஸ்த்ரீ(பெண்) யாரை குறிக்கிறது.
அதிகாரத்தின் பின்னணி:-
வானத்தில் அடையாளம் காணப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி பூமியில் நடந்தது. பாழாக்கும் அருவருப்பு அந்திக்கிறிஸ்து உபத்திரவ காலம் ஏழு ஆண்டுகளில் பாதி (மூன்றரை
ஆண்டுகள்) முடிவடையும் பொழுது எருசலேமிலே வந்து இறங்குவான் (தானி.9:27). அப்பொழுது யூதேயாவில் இருக்கிற
வர்கள் மலைகளுக்கு ஓடிப் போக வேண்டும் என்று கர்த்தர் கூறியுள்ளார் (மத்.24:15-22). அந்த நிகழ்ச்சி இந்த அதிகாரத்தில் வர்ணிக்
கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மூன்றரை ஆண்டுகட்கு முன்பாகவே சபை எடுத்து கொள்ள பட்டிருக்கும்.
மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன:-
1. இயேசுவின் தாயாகிய மரியாள்
2. சபை
3. இஸ்ரவேலர்
1. மரியாள் என்பதை பற்றின கருத்து:
இதில் கூறப்பட்டுள்ள 'ஸ்திரீ' என்பது இயேசுவின்
தாயாகிய மரியாள் குறிக்கிறதாக ஒரு குறிப்பிட்ட குழுவினர் கூறுகின்றனர். இது சரியன்று. ஏனெனில் சீடரோடு சேர்ந்து பரிசுத்த ஆவியைப் பெற்ற மரியாள் இப்பொழுது மற்ற பரிசுத்த
வான்களைப் போன்று பரலோகத்தில் இருக்கின்றார். உபத்திரவ காலத்தில் அவர் உலகில் இருக்கமாட்டார் என்பதால் இந்தப் பெண்
மரியாள் அல்ல.
2. சபை என்ற கருத்து:
இந்தப் பெண் சபையைக் குறிப்பிடுகின்றது என்று சிலர் கூறுகின்றனர். அவ்வாறாயின் வச.14-16 இன்படி உலகெங்கு
முள்ள சபை ஒன்றாகச் சேர்ந்து (எருசலேமிலிருந்து) ஏதும்
மோவாப் நாடுகளில் வனாந்திரத்திற்குப் செல்லும் என்று ஆகும். இது ஏற்றுக்கொள்ளத் தகுந்ததன்று. மேலும் இந்நிகழ்ச் சிக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இப்பொழுது இருக்கும்
சபை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். எனவே இந்தப் பெண் சபையைக் குறிக்காது.
3. இஸ்ரவேல் ஜனங்கள் என்பதை பற்றின கருத்து:
12 நட்சத்திரங்களுள்ள கிரீடம் என்பது இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைக் குறிப்பதால் ஸ்திரீ என்பது இஸ்ரவேலரைக் குறிக்கிறது என்பது நன்கு புரிகிறது. இஸ்ரவேலைப் பெண்ணாக ஏசா. 54:1-6; எரே 3:1-13; ஓசி.2:1-23 என்ற பகுதிகள்
வர்ணிக்கின்றன. இஸ்ரவேலர் ஏதோமுக்கும் மோவாபுக்கும் ஓடிப்போவதை ஏசா.16:1-4 கூறுகிறது (சேலா அல்லது பெட்ரா என்பது ஏதோமின் பண்டைக்கால தலைநகரமாகும் என்பதால் ஏதோமுக்கும் (வச.1) மோவாபுக்கு (வச.2-4) செல்வார்கள்) ஏதோம், மோவாப், அம்மோன் ஆகியவை அந்திக்கிறிஸ்துவினால்
கைப்பற்றப்படமாட்டாது என்பதை தானி.11:41 விளக்குகிறது. கர்த்தர் இஸ்ரவேலரை வனாந்திரத்திற்குப் கொண்டு சென்று அவர்
களை சந்திப்பார் என்பதை ஓசி.2:14 கூறுகிறது. மேலும் இவ்வாறு ஓடிப் போகிறவர்கள் யூதேயாவில் இருக்கிறவர்கள் என்று இயேசு
கூறியுள்ளார் (மத்.24:15-16). எனவே இஸ்ரேல் நாட்டிலிருக்கும் இஸ்ரவேல் மக்கள் இப்பெண்ணாகக் கூறப்பட்டுள்ளனர் என்பது
தெளிவு.
போதகர்.சார்லஸ் MSK