உபவாச ஜெபத்திற்கு உதவும் இருபத்தொரு ஆலோசனைகள்!!!!

1)உபவாசம் அவசியமானது
என்று உணர வேண்டும்,

2)எந்த நாளில் உபவாசத்தை
ஆரம்பித்து எந்த நாளில் உபவாசத்தை முடிக்கலாம் என்று
நாட்களை முன்கூட்டியே
தெளிவாக திட்டமிட வேண்டும்,

3)உபவாச ஜெபத்திற்கு ஓர் தெளிவான & ஆவிக்குறிய நோக்கம் இருப்பது மிகவும்
அவசியம்!

4)தேவன் எனக்கு உபவாசிக்க பெலன் தருவார் என்று உறுதியாக
நம்ப வேண்டும்,

5)உபவாசத்தை தொடங்கிய பின்பு கர்த்தரை துதிக்க அதிக நேரம்
செலவிடுவது உங்கள் உபவாச
நாட்களை இன்பமாக்கும்,

6)துதித்துக் கொண்டிருக்கும்
போது அப்படியே உங்கள் ஆவி
உங்களை ஜெபிக்கவும் தூண்டும்
அந்த தூண்டுதலோடு ஜெபிக்க
ஆரம்பித்து விடுங்கள்....

7)இவ்வளவு நேரம் ஜெபிக்க
வேண்டும் என்று உங்கள் மனதில்
நீங்கள் தீர்மாணம் எடுப்பீர்கள்
என்றால் அந்த ஜெப நேரம்
உங்களுக்கு பாரமாகிவிடும்...
எனவே உங்கள் மனம் ஜெபிக்க
தூண்டும் போதெல்லாம் ஜெபியுங்கள் அது மிகுந்த ஆசீர்வாதமாயிருக்கும்!
இந்த நாட்களில் ஆண்டவர்
உங்களோடு அதிகமாய் பேச சாத்தியம் உண்டு...
எனவே வேதத்தையும் அதிகமாக,
ஆர்வமாக வாசியுங்கள்!
தமது வார்த்தையால் உங்களோடு
நம் பிதா பேசுவார்.

9)பிசாசும் இந்த நாட்களில்
ஆண்டவரைப் போலவே பேசி
உங்களை வஞ்சிக்கவும் அதிக
சாத்தியம் இருக்கிறது எனவே
உணர்ச்சிவசப் படாமல்
உணர்வும் தெளிவும்
உள்ளவர்களாய் இருங்கள்!

10)தேவைப்பட்டால் ஒரு சிலருக்கு
நீங்கள் உபவாசத்தில் இருப்பதை
தெரியப்படுத்தலாம்...
But எல்லோரிடமும் சொல்லி உங்கள் உபவாசத்தை பிரபலப்படுத்துவது முக்கியமாக
தவிர்கப்பட வேண்டிய ஒன்றாகும்!

11)இந்த நாட்களில் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்
தேவை என்று
உணரும்போது சில
நேரங்களில் கருப்பட்டி காப்பியும்
குடித்துக்கொள்ளலாம் (ஆடம்பர
குளிர்பாணங்களை தவிர்க்க
வேண்டும் அது நல்லதல்ல)

12)அடிக்கடி சாதா தண்ணீரால்
Body wash செய்து கொள்வது
உங்களுக்கு புத்துணர்வை தரும்
அது நல்லது...

13)"நான் உபவாசிக்கிறேன்" என்ற
பெருமை மனதில் வரும்
அது இயல்பு தான்
ஆனால் தேவ ஆவியின் துணையோடு அதை உடைத்து
நம்மை நாமே தாழ்த்துவது மிகவும்
தேவையான ஒன்றாகும்!!!

14)நாட்களை எண்ணிக் கொண்டே
இல்லாமல் உபவாச ஜெபத்தை
அனுபவித்து ரசித்துக் கொண்டிருங்கள்!!!

15)உங்கள் ஜெபக் குறிப்பை
எழுதி வைத்தும் ஜெபிக்கலாம்

16)இந்த நாட்களில் தேவன் உங்களோடு பேசுவதை ஒரு
Note book ல் எழுதி வைத்துக்
கொள்ளுங்கள் (ஆனால் தேவன்
என்னோடு இப்படியாக பேசினார்
என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரியாதீர்கள் அது நல்லதல்ல)

17)முக வாடலாய் இல்லாமல்
எப்போதும் fresh சா இருங்கள்!!!
(நீங்கள் உயிருள்ள தேவனின் பிள்ளைகள்)

18)அளவுக்கு மீறி சத்தம் போட்டு
தொண்டையை புண்ணாக்கி
விடாதீர்கள் (அமைதியாய் ஜெபித்தாலும் ஆண்டவர்
நிச்சயம் கேட்பார்)

19)எப்போதும்
ஆவியானவரின்
பெலத்தை நாடிக்கொண்டே இருங்கள்...

20)நாட்களை மகிழ்ச்சியோடே
நகர்த்துங்கள்!!!

21)ஒரு நாள்
3 நாட்கள்
7 நாட்கள்
21 நாட்கள்
40 நாட்கள் என்று படிப்படியாய்
உங்கள் உபவாச நாட்களை
உயர்த்துங்கள்....

உபவாசிப்பது நல்லது
உபவாசிப்பது அவசியமானது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.